Saturday, October 29, 2011

ஏழாம் அறிவு எனும் மோசடி

ஏழாம் அறிவு எனும் மோசடி
___________________________
ஏழாம் அறிவு திரைப்படம் ஒரு பகட்டான மோசடியே !,தமிழகத் திலுருந்துதான் உலகிற்கே தற்காப்புக்கலை , நோக்குவர்வம் எனும் வசியக்கலை என உலகிற்கே ஏற்றுமதியாகி இருக்கிறது என்பது தமிழரை
புகழ்ந்தது ஏமாற்றும் பசப்புக் கலையே !,அதிலும் நோக்கு வர்மம் என்பது சாத்தியமற்ற அபத்தத்திலும் அபத்தம் ,இந்த பொய்யை பரப்ப ஐந்து ,ஆறு அறிவு பத்தாதென்று ஏழாம் அறிவாம்!! இதை வைத்துத்தான் ஒட்டுமொத்த படத்திலும்
வித்தை காட்டப்பட்டுள்ளது,இப்படி ரிமோட்டாக ஒரு மனிதனை மாற்றி கொலை, தற்கொலை ,அதுவும் வினாடி நேரத்தில் கொல்வதென்றால் அணு குண்டே தேவையில்லையே ?
எகாதிபத்தியத்திற்கு அதன் போக்கிலேயே போய் குறைந்த விலையில் உற்பத்தி ,அதிக வியாபாரம் எனும் தந்திரத்தில் பதிலடி கொடுப்பதால் ,சீனாவுடன் போட்டி போடுவது என்பது சகிக்க முடியாத பாதகம் தான்,எனவே அதன் எடுபிடிகளுக்கும் அதனை சகிக்க முடியாதுதான்.!இதன் பக்க வாதமே ஏழாம் அறிவு எனும் மோசடி. அண்டை நாட்டுடன் நல்லுறவு என்பது ஏகாத்திபத்திய ஆயுத வியாபாரிகளுக்கு பிடிக்காத விஷயம் ,இது ஏழாம் அறிவில் விஷமாக கக்கப்பட்டுள்ளது.

Friday, September 23, 2011

இன்னொரு தேர்தல் ..

இன்னொரு தேர்தல்
---------------------------------
தமிழ்நாட்டில் எல்லா ஊர்களிலும்,நகரங்களிலும்,பெருநகரங்களிலும்,சாலை குண்டும் குழியுமாக பல பத்தாண்டுகளாக விடியலுக்காக ஏங்கிகொட்டுருக்கின்றன, தமிழ் மக்கள் மழைகாலங்களில் எருமைகள் போலவும்,சாலைகள் குட்டைகளைப்போலவும் இருக்கின்றன , மழையற்ற வெயில் காலங்களில் கழுதைகளைப் போல சகிப்புத்தன்மை வாய்ந்தவர்களாக ,வாழ்வை பொதி போல சுமந்து பழகி, திரிந்து கொண்டிருக்கிறார்கள், மீதமுள்ள "குடிமக்கள் "தெருவோரங்களில் சாய்ந்தி கிடக்கிறார்கள்,போதை தெளிந்தவுடன் மீதம் இருக்கும் கால் காசை வீட்டிற்க் கொண்டு போக, மக்கள் கோரிக்கைகளுக்காக யாராவது போராடினால் நாயைப்போல அடிக்கப்படுகிறார்கள்,இவர்களை அடிக்கும் மாபாதகர்களோ காஞ்சி போட்ட உடுப்போடு, இவர்கள் நமக்காகவும் தான் போராடுகிறார்கள் என்ற எவ்வித பிரஞ்சையுமின்றி பிணங்கள் போல விறைப்பாக திரிய பழகிப் போய்,காவலாய் வளம் வருகிறார்கள் , தமிழ்நாடு இன்னொரு தேர்தலுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது...,மனமுடிததவடன்அடுத்தநாள் , தாலியறுக்கும் அரவான் திருவிழா தான் ஞாபகத்துக்கு வருகிறது....

Thursday, September 01, 2011

செங்கொடி

செங்கொடி,
உயரப் பறந்து,
உலகை வெல்ல
புறப்படவேண்டியவள் நீ!
மண்ணெண்ணெயில் பொசுங்கி
மடிந்து நீ போகலாமா?
சாம்பலிலிருந்து
பீனிக்ஸ் பறவையாய் வா
என்று சங்க நாதம் பேசுபவர்களுக்கு
மத்தியில்,நீ வாழ்ந்திருந்தால்
நிறைய சாதித் திருப்பாயே
என்று எண்ணத்தோன்றுகிறது
ஒரு சகோதரனாய் ...

மரணதண்டனை

மரணதண்டனை
---------------------------

மனித மாண்புகள்
ஆயிரம் ஆண்டுகள்
பின்னோக்கியே இருக்கிறது,
ஒவ்வொரு புதிய
மரணதண்டனையை நிறைவேற்ற
கயிறுகள் இறுக்கப்ப்படும்போதும் ...

Thursday, June 30, 2011

அவன் -இவன் - இதில் பாலா எவன்?




அவன் -இவன் -

இதில் பாலா எவன்?
-----------------------------------
பாலாவின் இயக்கத்தில் ,சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள் ,என தமிழ் திரைப்படங்களில் இதுவரை பேசப்படாத சமுகத்தில், விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றிய நுணுக்கமான பதிவுகளை பார்த்திருக் கிறோம் ., பல வகைகளில்
நம் மனதை பாதித்த நல்ல, இவரின் படைப்புகளை பார்த்திருந்த நமக்கு அவன்-இவன் வேறு விதமான உணர்வுகளை ஏற்படுத்துகிறது என்பதே உண்மை .பாலாவே சொன்னது போல இதை பொழுது போக்கு படம் என்பதனையும் மீறி
ஏற்படுத்தும் உனைவுகள் ,பகிரப்படவேண்டியவை களாகவே கருதுகிறேன் .சமகத்தில் குற்ற பரம்பரை என புறந்தள்ளப்பட்ட மனிதர்களைப் பற்றிய பதிவு என்பதனைத்தவிர நல்லதாக சொல்ல எதுவுமே இல்லை அவன்-இவனில் ,விரச நகைச்சுவை ,அபத்தங்கள், இவற்றை மீறி பார்வையாளனுக்கு பாலா தரும் செய்தியில் தொக்கி நிற்பது என்ன ?

வாழ்ந்துகெட்ட ஜமீந்தார் சேரியில் வாழும் ஏழை சிறு குற்ற வாளிகளுடனுனான தந்தை ,பிள்ளை யாய் நட்பு கொள்ளும் , அசாதரணமான மனிதர் ,(இந்த பாத்திரத்தில் நன்றாக நடித்துள்ள குமாரின் நல்ல நடிப்பு பாராட்ட படவேண்டிய தென்றாலும் பாத்திரப்படைப்பு காரணமாக வெறுப்பேற்றுகிறது.)மசாலா படத்தில் வரும நகைச்சுவை போலிஸ் பாத்திரங்களும் இங்கும், தாரளமாக பயன்படுத்தட்ட பட்டிருக்கின்றன.

நகைச்சுவை என்ற பெயரில் இம்சித்த பின்னால் ,
புதுமை வேண்டுமே ! முக்கால் வாசி படம் கடந்தபின் வில்லன் வருகிறான் , வில்லன் திடீரென்று வருவதில் தப்பொன்று மில்லைதான் ,திடீரென வரும் வில்லன் அடிமாடுகளை விற்கும் பயங்கர வில்லன் !, அடிமாடுகளை அரசிடம் பிடித்துக் கொடுக்கும் ஜமீன்தாரை,கசாப்புக்கடைக்காரனுக்கு கருணை இருக்காது என்ற மாமுல் பார்முலாவில்,-
ஜமீன்தாரை நிர்வாணமாக்கி அடித்து படுகொலை செய்து சாகடித்துவிட்டு , பின் கதாநாயகர்களால் வில்லன் சம்காரம் செய்யப்பட்டு ,உயிரோடு ,இறந்த ஜமீன்தாரின் சிதையில் கொழுத்தப்பட்டு என களேபரமாக ஒருவழியாக படம் முடிகிறது.




வில்லன் அடிமாடுகளை வியாபாரம செய்வது பாவமான செயலாம்! ,தகுந்த லைசென்ஸ் எடுக்கப் படாமல் வியாபாரம் செய்யும் சப்பை காரனத்தவிர ,இவர் பயங்கர வில்லனாக வர காரணங்கள் என்ன ?
கைவிலங்கிட்டு கொண்டு போகப்படுவதேன்?
ப்ளு கிராஸ் காரர்கள் ,உயர் அதிகாரிகளால் கைது செய்யப்படும் காட்சிகள் ,பாலாவால் மியுட் செய்யப்பட்டுள்ளது

கோழி சப்பையை ருசித்து சாப்பிட்டு ,எந்த நேரமும் உயர் சாராயத்தை குடித்துக் கொண்டும், ஏழை நண்பர்களுக்கு ,தாரளமாக கொடுத்துக் கொண்டிருக்கும் தத்து பித்து ஜமீந்தார், உள்ளத்தில் நல்லவராம்!, சரி போகட்டும். வில்லனுடைய கேள்வியாக படத்தில் வரும் கேள்வியான "அடிபாடுகளை சாப்பிடுபவர்களை போய் கேட்க வேண்டியது தானே? குர்பானியாய் ஒட்டகங்களை கொடுப்பவர்களை போய் கேட்க்கவேண்டியத்டுதானே" ! என்ற கேள்விகளின் வாயிலாக என்ன சொல்ல வருகிறிர்கள்? பாலா? ..

அடிபாடுகளை உண்ணும் தலித், சிறுபான்மை மக்கள் ,மரியாதிக்குரியவர்களில்லை என்பது என்ன இசம் பாலா? உழைத்து ஏராளமான உடல் சக்தியை இழந்த ஏழை மக்களை,உயிர் வளர்க்க உணவாக , மாடு,நத்தை ,கோழி ,எலி ஈசல், என பலவற்றையும் சாப்பிடும் சாதாரண மக்களை,
பார்த்து நீங்கள் கேட்க்கும் கேள்விதான் என்ன? நர மாமிசம் சாப்பிடும் அகோரிகளை மனித நேயத்தோடு பார்க்கும் உங்களால் ,தலித், சிறுபான்மை மக்களை பார்க்க முடியாமல் எது மாற்றியுள்ளது?இறந்த மாட்டிறச்சியை சாப்பிட்ட தற்காக சஜ்ஜாரில் கொல்லப்பட்ட ஐந்து தலித் மக்களை கொன்றவர்களின் ,பார்வை கோளாறு உங்களுக்கும்
ஏற்பட்டுவிட்டதா ? அவன் - இன்னில், நீங்கள் எவன்?

தங்களைப் போன்ற நல்ல படைப்பாளிகள், அடுத்த திரைப்படங்களில் மதமாச்சர்யங்க்களை கடந்தது வரவேண்டுமென ஆவலுடன் ...
- இப்படிக்கு,
திரைப்படத்தை பத்து நாட்களுக்கு முன்பாக பார்த்து விட்டாலும்
கேள்விகளுடன்
உங்கள் ரசிகன்.

Wednesday, April 06, 2011

'எரியும் வயிறுகளும் எரியாத அடுப்புகளும்

சேலம் மாவட்ட தமுஎகச 6.4.11 அன்று நடத்திய

'எரியும் வயிறுகளும் எரியாத அடுப்புகளும்' கவியரங்கத்தில்

வாசிக்கப்பட்ட எனது கவிதை.

(உரைநடைக் கவிதை ..!)

*************************************************


ராசாத்திக்கு எப்போதும் வருவது போல்

அதே கனவு இன்றும் வந்து போனது நினைவுக்கு வந்தது

ஓட்டுக் கேட்டு செல்லும்

ஆட்டோவைப் பார்த்ததும் ,


கிடைக்காமல் போன ரேசன் கார்டும்,

வாக்காளர் அட்டையும்,

இலவச தொலைக்காட்சியும்,

உதவிப் பணங்களும் .அவள்

கனவிலும், நித்தமும் கன்னாமூச்சியாடின .


வாடகைக் குடிசையில்

வாழ்க்கை நடத்துவதால்,

ரேசன் கார்டு கேட்டு எத்தனை மனுக் கொடுத்தாலும்,

புதிது புதுதாய் எதையாவது கேட்டு ,

அலைக்கலிக்கும் அதிகாரிகளிடம்,

சொந்த நாட்டில் அகதியான

அவளால் ,எத்தனை வருடம் போராடினாலும்,

இதுவரை நிரூபித்து எதையும் வாங்க முடியவில்லை .


எந்த ஆதாரத்தைக் கேட்க்கிறார்கள்?

ஆயிரத்து ஐநூறு சம்பளத்தில் ,

வீட்டுவேலைக்கு போய்வரும் அவளுக்கு,

இதுவரை எதுவும் சொந்தமாக

இருந்ததில்லை ,

தன பிள்ளைகைத் தவிர ..


தினமும் குடித்து விட்டு வந்து

சண்டை போட்டு ,அவளை அரை உசிராக்கி விட்டு ,

எப்போதோ ஓடிப்போன கணவனுடனான வாழ்வைப்போல ,

துரதிஷ்டம் தொடர்ந்தே வருகிறது ,இதிலும் அவளுக்கு,


பாதியிலே படிப்புக்கு

முழுக்குப் போட்டு ,

வேலைக்குப் போய்

பணம் தரும் 16வயது மகனையும் ,

தேடிப்பிடுத்து ஒற்றை ரூபாய்

ரேசன் அரிசியை எத்தனை ரூபாய்க்கு

வாங்கிசமைத்தாலும், விழுங்க முயாமல் அழுது ,

முப்பது ரூபாய் அரிசிச்

சோறு கேட்கும்

சின்ன மகளும் தான், இன்று

அவளுக்கு சொந்தமும் ,சொத்தும்,


மளிகைக் கடை அரிசிச் சோறும்,

பாதி நாள் எரியாத அடுப்பும்,

என்றும் பசியால், நிறையாதிருக்கும்

மூன்று வயிறுகளும்,

விட்டுப் போன கணவனின் துன்ப

நினைவுகளின் தொடர்ச்சி போல்

கூடவே வந்து கொண்டிருக்கின்றன ,

நிரந்தர துணையாக ,அவளுக்கு..


Friday, March 04, 2011

சில்லறை பிரச்சனை

சில்லறை பிரச்சனை
-----------------------------------------
ஆண்டி முத்து ராசாக் களுக்கும் ,நீரா ராடியாக்களுக்கும் பல லட்சம் கோடியில் பிரச்சனைஎன்றால் நம்மைப் போல் பாமரார்கள் நிறைய எதிர்கொள்வது சில்லறை பிரச்சனைகளே!
பாரதி கூட இப்போதிருந்தால்
'எங்கெங்கு காணினும் சக்தியடா' என்பதற்கு பதில் சில்லறை பிரச்சனையடா என்று கவிதை பாடியிருப்பாரோ என்று தோன்று கிறது .
என்ன கொடுமையடா சாமி,சில்லறைக்காக பேரூந்து நடத்துனரிடம் , தேநீர் கடைகாரரிடம், பெட்டிக் கடைக்காரரிடம், ஆட்டோ ஓட்டுனரிடம், சாலையோர சிற்றுண்டி கடைக்காரரிடம்,ஏன் பிச்சைக் காரக் கனவான்களிடம் ,ஒரே பாட்டுதான் ! யப்பா! எல்லோருமே கையில் சில்லறையோடு வரச்சொல்லி அறைவிடாத குறையாக கேட்டுக் 'கொல் 'கிறார்கள் .எனவே குறைந்த,நீண்ட தூர ,பயனமாயினும் ,ஏன் ,அடுத்த தெருவுக்குப் போனாலும் ,அடையாள அட்டையை மட்டும் கொண்டு செல்லாமல் , குறைந்தது ஐம்மது,நூறுக்கு சில்லறைக்காசு எடுத்துச்செல்வது நலம்,
(குறிப்பு: :குறைந்த்தது சில்லறைக்கு- நூற்றுக்கு ஐந்து ருபாயாவது கமிசன் அழ வேண்டும்! )
ஹூம் என்ன செய்வது அவசரத்தில் ,எதையும் திட்டமிட்டுச செய்வதென்பது நமக்கு கைவராத கலையாயிற்றே !
இருப்பினும் ,மறக்காமல் கால் கிலோ சில்லறையோடு கனவான்களாக செல்வதே மரியாதையாக இருக்கும் போல் இருக்கிறது.!?

Thursday, January 06, 2011

வலி

வலி
-------
மெல்லிய தென்றலும்,சின்னத் தூரலுமாக
சிலிர்க்க வைக்கும் கவிதைகளை...
உணர்வுகளை உலுக்கியெடுக்கும் கவிதைகளை ,
உளத்தை வென்றெடுக்கும் உன்னத கவிதைகளை,
ரசிக்கும் போது ,எண்ணத்தோன்றுகிறது ..
உள்ளத்தையும் உடுருவும் அற்புதமானவை
இவை என்று, வாசகனாய்....
கவிஞ்னாய் மாறும்போதுதான் ,
நிச்சயம் கவிதைப் பிரசவமும் ,
கற்களைச் செதுக்கி, சிற்பம் வடிப்பது போன்று .
வலிமிகுந்ததுதானென்று....