Friday, August 12, 2016


                                      

            நூல் ஆய்வு: சேகு,   நூல் ஆசிரியர்: இலா.வின்சென்ட்,
            வெளியீடு  :பாரதி புத்தகாலயம்விலை:90/, பக்கங்கள்: 128

               சேலத்து எழுத்தாளர் இலா. வின்சென்ட் அவர்களுடைய இருட்டைத்  தின்றவர்கள் சிறுகதைத் தொகுப்பை வாசிக்கும் அனுபவம் அலாதியானது. இக்கதைகள் அத்தனையும் சேலம் சார்ந்த பகுதிகளில் நடப்பதாக அமைந்துள்ளதானது, இன்னும் சிறப்பைக் கூட்டுகிறது. இலா.வின்சென்ட் சிறுகதைகள்,கட்டுரைகள்ஆய்வு நூல்கள் எனப் பல நூல்களை எழுதியவர். சேலம் த.மு.எ.க.சாவின் சாளரம் சிற்றிதழில் பொறுப்பாசிரியர். அந்த வகையில் அவருடைய அனுபவ நடைஇந்த நூலில் உள்ள சிறுகதைகளில் சிறப்பாக வந்திருக்கிறது. சிறுகதைக்கான களமும் சமூகத்தின்,எதார்த்தமானஅடிதட்டு மக்களுடைய பிரச்சனைகளைப் பேசுகின்றபடியால் இதில் உள்ள 12 கதைகளும்ஒவ்வொன்றும் ஒரு விதத்தில் நமது மனத்தை ஊடுருகின்றன. இந்த  கதைகளில் பல்வேறு சமயங்களில் பல்வேறு இதழ்களில் பிரசுரமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

             விதைகள் உறங்காது என்னும் சிறுகதை நம் சுதந்திர இந்தியாவின் முதல் அரசு பயங்கரவாதத்தைசேலம் சிறையில் நிராயுதபாணியான கம்யூனிஸ்ட் தோழர்கள் 22பேரைஅரசியல் கைதிகளுக்கான உரிமையைக் கோரியதற்காக, சிறைத்துறை காட்டுமிராட்டிதனமாகத் துப்பாக்கிச் சூட்டை நடத்தி படுகொலை செய்ததன் பின்னணியில் நிகழ்வதாக  படைக்கப்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.  மருந்து எனும் சிறுகதை துப்புரவுத் தொழிலாளிகள் மனித மலத்தை சுத்தம் செய்வர்களாக்கப்பட்டுமனித உரிமை மறுக்கப்பட்டர்வளாகிய அவல  சூழலில் வாழும் சீரங்கனுக்கும்இத்தொழிலை வெறுக்கும்,சிறுமகள் கலையரசிக்குமான மனக்குமுறலை மையமாக வைத்துநம் மனதில் குமுறலை ஏற்படுத்துகிறது.

           இலக்கணம் மாறுதோ எனும் சிறுகதை இறைவழிப்பாதையில் ஈடுபட்டும்மேரி எனும் எளிய ஆசிரியை தனது சுயநலத்திற்காக வேலையை விட்டு துரத்திடத் துடிக்கும் அமலா எனும் அருள் சாகோதரினுடைய, மோசமான மறுபக்கத்தைக் காட்டுகிறதுஇந்தப் போரட்டத்தில் அடக்கு முறைக்கு உள்ளாகி இறுதியில் பொங்கி எழுந்து போராடும் மனுஷியாக நம் மனதில் ஆசிரியை மேரி உயர்ந்து நிற்கிறார்.

          இருட்டைத் தின்றவர்கள் சிறுகதை ஒரு காலனியில் வசிக்கும் எளியவர்களுடைய நிலத்தைவீடுகளைத் தட்டி பறிக்கும் அரசியல் சூழ்ச்சியையும்அடக்குமுறையையும் நம்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. விசாரணைக் கூண்டு சிறுகதை ஒரு பெண்ணின் மீது கணவனின் குடும்பம் நிகழ்த்தும் குடும்ப வன்முறையையும்அப்பெண்ணுடைய பலவிதமான கேள்விகளையும்,மனக்குமுறல்களையும் பேசுகிறது. ஒதுக்கல் எனும் சிறுகதை ஜாதி மறுப்பு திருமணம் செய்த தலித் பெண்ணுக்குமேல்ஜாதி கணவனுடைய வீட்டார்அவன் இறந்த ஈம சடங்களிலும் அவனுடைய சிறுவயது மகன்மீது காட்டும் ஆதிக்க வெறியைச் சொல்கிறது.  என்று தணியும் எனும் சிறுகதை ஒரு இஸ்லாமிய பெண்ணின் அவலத்தை,  சதி திட்டம் தீட்டி மாமியாக்காரி,மருமகளைப் பலிவாக்குவதற்காக நடத்தும் தலாக் நாடகமும் அதிலிருந்து கணவனை மீட்டுவரும் இளம்பெண் ஆயிஷாவின் போராட்டத்தைச் சொல்வதுடன், அடிதட்டு இஸ்லாமிய மக்களின் வாழ்க்கையையும் நம்முன் கொண்டு வருகிறது.

          மண்கரடு சிறுகதை இணக்கமாக வாழும் இந்துமுஸ்லீம் மக்களிடையே மதவாதிகள் தூவும் நச்சு விதைகளைச் சுட்டிக் காட்டுகிறது. கைநழுவி போனது எனும் சிறுகதை தன் கணவனை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பி, சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற இலட்சியத்தால் தனி ஒருத்தியாக நின்று புதிய வீட்டைக் கட்டி முடிக்கும் இளம்பெண் மல்லிகாவினுடைய,பொறுப்புணர்ச்சியையும் அதற்காக அவள் இழந்த நிம்மதியையும்வலியையும்வெளிநாடு சென்று வேலை செய்து பிழைப்பவர்கள்சமூக அந்தஸ்து உயர்ந்தாலும்அவர்கள் தொலைத்த வாழ்க்கையையும் சொல்கிறது.
   
       இத்தகைய பல உறவுகள் நமக்கும் வாய்த்து இருப்பதால், நம் மனமும் கனத்து போகிறது. இது தவிர்த்து ஒவ்வொரு சிறுகதையும் ஒரு போராட்டத்தைவைராக்யத்தை நம்முன் நிறுத்துவதாகவும்,  இருப்பதால்அனைத்து சிறுகதைகளும் நம்மை ஆட்கொள்கின்றன.  நூலாசிரியரின் அற்புதப் படைப்பாற்றல்,ஒவ்வொரு சிறுகதையிலும் நம் மனக்கண்ணில் காட்சிகளாககேள்விகளாக, இன்னும் சொல்லப்போனால் இந்தக் கதை மாந்தர்களுடன் நெருக்கமனவர்களாக நம்மை கொண்டு வருவதில்  நூலாசிரியர் இலா.வின்சென்ட்  வெற்றியடைகிறார். இந்தச் சிறுகதை தொகுப்பு நிச்சயமாக வாசகனுக்கு ஒரு நல்ல வாசிப்பு அனுபவத்தைத் தரும் என்பதனால், இந்நூல் வாசிக்கப்படவேண்டிய ஒரு நல்ல  சிறுகதைத் தொகுப்பாக நான் கருதுகிறேன்.