Friday, May 30, 2014

நூல்களுடன் எனது நாட்கள்..!

நூல்களுடன் எனது நாட்கள்..! 
***************************
என்னுடைய படுக்கையிலும், பக்கத்திளுமிருக்கின்றன ...
அரை வாசிப்பிளிருக்கும் புத்தகங்கள்..!
படிக்க தூண்டும் அத்தனை புத்தகங்களையும், 
வாங்கிவிடும் மனதும்,வசதியும் வந்துவிட்ட பிறகு 
தொட்டுத்தடவினாலே அசதிவந்துவிடுகிறது...
எதார்த்த வாழ்க்கையின், பதார்த்தமாகிப் போனதால்.. 
வயோதிக மன்னனின் அந்தப்புரத்தில் சேர்க்கப்பட்ட 
புதிய இளம் பெண் போல விழித்துக் கொண்டிருக்கின்றன
என் புத்தகங்கள் ...வாசிப்பவனுக்காக..!

--சேகு--