Wednesday, May 21, 2014

காப்பாற்றும் கண்ணபிரானா? -மோடி !?

காப்பாற்றும் கண்ணபிரானா? -மோடி !? ---------------------------------------------------------------------- பிரதமராக கோடான கோடி வாக்குகள்,கோடான கோடி செலவினங்கள்,ஸ்பான்சர்கள் மூலமாக மோடி வென்றுவிட்டார்.மக்கள் பலத்தால் வென்றவரை வாழ்த்துவது மரபு.,என்வே சில, பல தயக்கங்களைமீறி வாழ்த்துவோம் ! புதிய அரசை குறைந்தது 100 நாட்கள் கழித்து விமர்சிப்பதே ஞாயமாக இருக்கும்.!ஆனால் வெற்றிக்காக இவர்கடந்துவந்த பாதை,கொள்கைகளை ஒரு பறவைப்பார்வை பார்க்கலாம். பாராளுமன்ற பி.ஜே.பி எம்பிக்கள் கூட்டத்தில் பேசிய மோடி 125 கோடி மக்களுக்காக பாடுபடுவேன் என்று சொல்லியபோது மகிழ்ச்சியாக இருந்தது,.ஆனால் பி.ஜே.பி மற்றும் அதன் சார்பு அமைப்புகள் பல வித மாக விதமுரண்பாடி, பெரும்பான்மை மக்களுக்கு ,சிறுபான்மை இஸ்லாமிய,கிருத்துவ மக்கள் அச்சுறுத்தலாக இருப்பது போன்ற மாயையை ஏற்படுத்துவதில் கொள்கையாகவும்,குறியாகவும் இருந்தன.ஆனால் குறிப்பாக இஸ்லாமிய மக்கள் வயிருவீங்கிய ,உடல் சிறுத்த சத்தற்ற உயிரனத்திற்கு ஒப்பாகவே இருக்கிறார்கள் . .உயர் கல்வியில் ,வேலை வாய்ப்பில் அரசின் அத்துணை துறைகளிலும் 5 சதவீதத்துக்கு கீழே இருக்கக்கூடிய இந்த சவலைப் பிள்ளையை ,பூச்சான்டியாய் சித்தரிப்பதில், சித்தாந்தப் பெருமை கொள்ளும் சங்க பரிவார் பெற்றெடுத்த முத்து தான் மோடி.தனது மண்ணைக் கூட முத்தமிடும் இவரிடம் சிறுபான்மை மக்களைப் பற்றிய ஆறுதலான ஒரு வார்த்தை , தவறிககூட வெளிவரவில்லையே !. நிச்சயமாக இந்திய மக்கள் மதவாதப் பாதையை தேர்ந்தெடுப்பவர்களில்லை ! ஏனெனில் இதுவரை இந்திய வரலாற்றில் ,மதவாதக் கட்ச்சிகள் பெரும்பான்மை பலம் பெற்றதே இல்லை.!பின் இந்த முறை என்ன நடந்துள்ளது?செல்லரித்துப் போன காங்கிரசின் வேதனை தரும் ஆட்சியிலிருந்து காப்பாற்றும் முகமாக இந்த காவரைத் தேர்வு செய்திருக்கிறார்கள்! .,இவருடைய முந்தைய வரலாறுகளைகே கூட புறம்தள்ளி ..! இதில் ஸ்பான்சர்களின்(பெரு முதலாளிகள்,அவர்களின் மீடியா பங்காளிகள் ) பங்கு முக்கியமானது..பெருமுதலாளிகளுக்கு வேரு கவலை!? குறைந்த விலையில்,குறைந்த வரியில் தங்களுடைய அகோர பசிக்கு காங்கிரஸ் தந்து கிழ டாகிப்போனதால்,சவாரிக்கு புது குதிரை வேண்டுமே! இந்நிலையில் பிரதமர் மோடி வறுமை இந்தியர்கள்,தலித்துகள்,சிறுபான்மை மக்கள் ,என கையறு நிலையில் இருக்கும் திரௌபதி களை காப்பாற்றும் கண்ணபிரானா? துகிலுரியப்பட்ட போது நெடுமரமாக நின்ற பீஷ்மாச்சாரியாரா? வரும் ஐந்தாண்டுகள் முடிவுசெய்யும்!