Saturday, December 25, 2010

வடுக்கள்

முன்று நாட்களுக்கு முன்பு
துயரமா கஇருந்தது ,
கோபமாக்கியது ,
மகிழ்ச்சியைக்கொடுத்தது எல்லாமுமே ,
இன்று மாறிப்போய்....
சலனமற்று, கடந்துபோயிருந்தது ,
முன்று நாட்களுக்கு முன்பு -
சூழ்ந்திருந்த வங்கக் கடல் புயல் போல் .

வரிக்குதிரையின் கணக்கிலடங்காத
வரிகளைப்போல ...
புதிய நாளான இன்று புதிதாய் நான்..
எதிர்பார்ப்புகளுடனும்,
கண்ணுக்குதெரியாத
புதிய சில வடுக்களுடன் ....
எப்பொழுதும்போல் ..!

Monday, November 01, 2010

மழையே ..மழையே ..மீண்டு(ம்) வா ..!
-------------------------------------------

மழை பெய்யும் இரவு இன்று,
மழை பற்றியான ஏக்கம்
மனதிற்குள் எப்போதும் ...
ஒரிசாவிலும் ,ஆந்திராவிலும்,
புயல் மழை என்றாலும்,
ஏனோ.. வருத்தம் வருவது குறைவுதான் !

சாக்கடை நதியில் நகரத்தில் பயணித்தாலும்.
நல்லமழைக்கான ஏக்கம்
எங்கள் மக்களுக்கு என்றுமே...
புயலைக் கூட மகிழ்ச்சியுடன் சந்திக்க மனமிருக்கிறது
மழையுடன் வருவதால் .
காய்ந்து போன நிலதுக்காரர்களுக்கு
வெள்ளம் புயலின் வீரியம் புரிவதில்லைதான் ,,,