Wednesday, June 15, 2016

தக்காளி அரசியல் :

தக்காளி அரசியல் :
வின்னில் இருபது செயற்கைக்கோள்களை ஒரே நேரத்தில் செலுத்தும் வல்லமை பெற்றுவிட்டோம். எந்த நாட்டிற்கும் இளைத்தவரில்லை 
நாம் என்று மார்தட்டுகிறோம்.,,

தக்காளி விலை சரியும் போது
விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்'...
விலை உச்சத்தை எட்டும் போது மக்கள்
கையறு நிலையில் இருக்கின்றனர்.. .( எல்லா விளை பொருள்களும் இதில் அடக்கம் )

ஒரே நாளில் பல கோடி பேருக்கு டிக்கட் தரும் இரயில்வே நெட்வொர்க் சரியாகவே செயல்படுகிறது!
ஆனால் வாடும் விவசாயிகளையும், வதைபடும் மக்களையும் காப்பாற்ற
எந்த நெட்ஒர்க்கும், எந்த அரசும் அமைக்க வில்லை!
அமைச்சர் சொல்கிறார். " சில மாதங்கள் விலை ஏறி, பிறகு சரிந்து தானே சரியாகிவிடுமாம் இந்த பிரச்சனை!
பிறகு எதற்கு ஓட்டு கேட்கும் போது : விவசாயிகளுக்கான, சாதாரன மக்களுக்கான ஜனநாயகம் தருவோம் எனும் வாக்குறுதி வாய்ஜாலம் ! மகாமந்திரிகளே!

உங்கள் வெளிநாட்டு விமான பயணத்தில், உடன் அழைத்துச் செல்லும் மகா வணிகர்களுக்கு மட்டும் தானே ! உங்கள் ராஜ்யம் ...