Thursday, September 01, 2011

செங்கொடி

செங்கொடி,
உயரப் பறந்து,
உலகை வெல்ல
புறப்படவேண்டியவள் நீ!
மண்ணெண்ணெயில் பொசுங்கி
மடிந்து நீ போகலாமா?
சாம்பலிலிருந்து
பீனிக்ஸ் பறவையாய் வா
என்று சங்க நாதம் பேசுபவர்களுக்கு
மத்தியில்,நீ வாழ்ந்திருந்தால்
நிறைய சாதித் திருப்பாயே
என்று எண்ணத்தோன்றுகிறது
ஒரு சகோதரனாய் ...

மரணதண்டனை

மரணதண்டனை
---------------------------

மனித மாண்புகள்
ஆயிரம் ஆண்டுகள்
பின்னோக்கியே இருக்கிறது,
ஒவ்வொரு புதிய
மரணதண்டனையை நிறைவேற்ற
கயிறுகள் இறுக்கப்ப்படும்போதும் ...