சாளரம் இதழ் 50 சிறப்பிதழாக வந்துள்ளது. முதல் சாளரம் இதழை வெளியிட்ட 2004 ஆம் ஆண்டை நோக்கி மனம் அசைபோடுகிறது. 2003 கலை இரவு தந்த உற்சாகத்தில் , தமுஎகச வில் ஒரு மிகப்பெரிய குழுவை பெற்றிருந்தோம்.
தொடர்ந்து வாசகர் வட்டங்களை நடத்த ஆரம்பித்தோம். பிரவாகம் எனும் பதினாறு கவிஞர்களுடைய கவிதை தொகுப்பையும் வெளியிட்டு இருந்தோம்.அதோடு ஒரு மனக்குறை தொடர்ந்து இருந்தே வந்தது .,நமக்கென்று ஒரு சிற்றிதழ் வேண்டும் என்ற எண்ணமே அது. ஒரு சில சிற்றிதழ்களில் தோழர் அசோகன் தொடர்ந்து எழுதி வந்தார் . அதோடு தீக்கதரிலும் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்தார். நானும் சில சிற்றிதழ்களில் எழுதி வந்தேன்.
எங்கள் நட்பு வட்டத்தில் நமக்கென ஒரு சிற்றிதழ், சேலம் படைப்பாளிகளுக்கு முதன்மை தரும் சிற்றிதழ் தேவை, என நினைத்தோம். அப்போது சரவணமணியன், அக்னி கலைக்குழு தோழர் கண்ணன், மறைந்த தோழர் ராஜசேகரன், தக்கை இதழை நடத்தி வந்த மறைந்த கவிஞர் வே. பாபு,ஆகியோர் தந்த உற்சாகத்தில் சாளரம் இதழை ஆரம்பித்தோம். எழுத்தாளர் சத்தியப்பிரியன் உட்பட பல நண்பர்களின் உற்சாகப் பங்களிப்பினாலும் இதழ்தொடர்ந்து வெளிவித்தது.
2012 ல் தனக்கென தனிமுத்திரையை, தனது படைப்பாக்கங்களால் பெற்றிருந்த தோழர் அசோகன் மறைவுக்குப் பின்னால், இதனை மதுரபாரதி, தோழர் நிறைமதி, இதன் அச்சுப்பணியை மட்டுமல்லாமல், வரவு செலவு நிர்வாகத்தை ஏற்று திறம்பட நடத்தி வரும் தோழர் ஷோபனா, இதனை செழுமைப்படுத்தியபணியில் முக்கிய பங்காற்றித் தரும் எழுத்தாளர் தோழர் இலாவி, தோழர் கவுதமன் ,தோழர் செண்பகராமன், தோழர்கள் ரகுபதி,தெவிட்டா மணி மற்றும் ஆசிரியர் குழு நண்பர்கள்,எப்போது வெளிவரும் என்று தொடர்ந்து எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்திக் கொண்டு இருந்த தோழர்கள் காவேரி துரை, வசந்தி,கவிஞர்ஜெயக்குமார்,கார்த்தி,கீர்த்திகா ஆகியோர்,தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வரும் தோழர்.சுல்தான்,சேலம் வரலாற்று சங்கத்தைச் சேர்ந்த பர்ணபாஸ்,கவிஞர் ஐயா முத்துமாரய்யன், 1000 ரூபாய் நன்கொடை தந்து உதவிய புரவலர் குழுவினர், விளம்பரதாரர்கள், தொடர்ந்து வெளிவர உற்சாகமளிக்கும் பாலம் சகஸ்ரநாமம், தொழிலதிபர் புரவலர் ச.பாலசுப்பிரமணியம்,கல்வியாளர் சாம்சன் ரவீந்திரன், என இன்னும் நீண்ட,பெயர் குறிப்பிட விட்டுப் போன பல நண்பர்கள்,வாசகர்கள் என பலரும் ஒரு சில சமயங்களில் தாமதம் ஏற்பட்டாலும்தொடர்ந்து வர உற்சாகமளித்து வந்துள்ளனர். அனைவருக்கும் இந்த 50 வது சிறப்பிதழ் வருவதில் கிடைக்கும் மகிழ்ச்சியை சமர்ப்பிக்கிறோம்.
: ஷேக் அப்துல்லா.
பி.கு:(இந்நிகழ்ச்சிக்கான நாள் நான்கு நாட்களுக்குள் திட்டமிட்டு டிஜிட்டல் அழைப்பிதழ் மட்டுமே பரிமாறப்பட்டதால் பல நண்பர்களுக்கு அனுப்ப விடுபட்டு போய்விட்டது. அவ்வாறு விடுபட்டதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். )
No comments:
Post a Comment