Wednesday, November 16, 2016

"வதை தரும் அதீத உழைப்பை ஒழிப்போம்"

பாலம் 13.11. 16- காலையில்,நடைபெற்ற வாசகர் வட்ட நூல் அறிமுகம் ,நண்பர் அழகுராஜ் அவர்களின்
அருமையான புரிதல் தந்த அறிமுக உரையும், விவாதங்களும், நாம் அறியாத ',விவாதிக்காத புதிய விசயங்களை, வாசகர்கள் அனைவருக்கும் கொண்டு சென்றது.

உழைப்பை ஒழிப்போம் - இத் நூலின் ஆசிரியர்கள் இருவர் : பால் லஃபார்க் (மார்க்ஸின் இரண்டாவது மகள் லாராவின் கணவர் - மறைவு 1911) இரண்டாமவர் பாப் ப்ளாக் 1951-ல் பிறந்தவர். இவருடைய 1985-ல் எழுதிய கட்டுரையையும் கொண்டது இந்நூல்.
உண்மையில் இந்த நூல் சொல்வதெல்லாம் , மனிதஉழைப்பு, அதைச் சுற்றி கட்டமைக்கப்பட்ட பல்லாயிரம் ஆண்டு கால கற்பிதங்கள், நம்மை ஆட்சி செய்யும் மதங்களைப் போல் , நம் இயல்பையும், இந்த புவியையும் எப்படியெல்லாம் சீர்குழைத்திருக்கின்றது என சொல்லும், அற்புதமான படைப்பு ...
ஒரு மேலோட்டமான வாசிப்பிற்கு பிடிபடாத  விசயகணமிக்கது. ஆழ்ந்து வாசிக்க வேண்டிய முக்கியமான நூல் இது. தலைப்பு நம்மை மிரட்டினாலும், உண்மையில் இந்நூல் சொல்வது
"வதை தரும் அதீத உழைப்பை ஒழிப்போம்". நியாமான பலன் தரும் உழைப்பு மட்டுமே, மனிதன் செய்யத்தக்கது , உழைப்பைப் போல்,ஓய்வும் , கலை யும்,இன்ப நுகர்வும் ,நமது உரிமையே"என்பதே.

No comments: